×

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் வசதிக்காக 2 குடிநீர் தொட்டிகள்

 

பெரம்பலூர்,ஏப்.29: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் வசதிக்காக தலா 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகள் நகராட்சி நிர்வாகத் தின் மூலம் அமைக்கப்பட் டுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், ஏற் கனவே 500 லிட்டர் கொள்ள ளவுள்ள தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பயன் பாட்டில் உள்ளது. இருப்பி னும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கூடுத லாக தண்ணீர்த் தொட்டி கள் வைக்கவேண்டும் என் றக் கோரிக்கை எழுந்ததை அடுத்து, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேலும் தலா 500 லிட்டர் கொள்ளளவுள்ள இரண்டு தண்ணீர் தொட்டி கள் நேற்று பொதுமக்க ளின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டதன் பேரில், பெரம்பலூர் நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுத் துள்ளதற்கு பயணிகள் மற் றும் பொதுமக்கள் வியாபா ரிகள் நன்றிகளைத் தெரி வித்துள்ளனர்.

The post பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் வசதிக்காக 2 குடிநீர் தொட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Perambalur new bus station ,Perambalur ,Municipality ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...